Tamil

ஒரு துளி நீரினால்
மலர்ந்த பூக்கள் அறிந்தாய்

ஒற்றை சிலிர்ப்பில்
மலர்ந்த பூ அறிவாயா?

உன் விரல்களிடம்
விசாரணை செய்..

அல்லது

உன் இதழ்களிடம்
என்னவென்று கேள்...

உணர்ந்தவை
அவை மட்டுமே...


Urz.....................Janarth..............

அன்பு = 100

 அ உயிரெழுத்தின்
முதல் எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 1
ன் மெய்யெழுத்தின்
இறுதி எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 18
பு என்ற உயிர்மைஎழுத்தே
உன் எண் வரிசை 81 - கண்டீரா
அன்பு என்ற தமிழ் சொல்லின்
கூட்டுத்தொகை 100 என்று
அன்பென்றால் நூறு
நூறென்றால் முழுமை
முழுமை என்றால் நிறைவு
அன்பு வழிச் சென்றால்
முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும்
அதன் வழி வரும் அமைதியும்
நூற்றுக்கு நூறு - நம்
வாழ்வில் சாத்தியமே - இதுவே
சான்றோரின் சரித்திரமே


No comments:

Post a Comment